பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியானது. - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியானது.

கண்டி மாவட்டம் கம்­பளை கல்வி வலயத்­திற்குட்­பட்ட அட்­ட­பாகே உட­கம மகா வித்­தி­யாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயின்ற மதுபாசினி புத்­திக லிய­னகே என்ற 16 வயது மாணவி பாடசாலையில் சங்­கீத அறையில் பயிற்சி பெற்று விட்டு நடன அறைக்கு சென்ற வேளையில் மயங்கியுள்ளார். 

பின்னர் உட­ன­டி­யாக ஆசி­ரி­யர்­க­ளினால் இவர் உட­கம கிரா­மிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­க­ப்பட்டு பின் கம்­பளை வைத்தியசா­லைக்கு கொண்டு செல்லும் போது இடை­யி­லேயே மரணித்­துள்ளார். 

இந்த மாணவி மில்­ல­கா­முல்லை தெனி­ய­கம பிர­தே­சத்தை வசிப்பிடமாக கொண்­டுள்ள அதேவேளை, இவர் குடும்­பத்தின் மூத்தப் பிள்­ளை­யாவார்.

இந்த மரணம் தொடர்பில் கம்­பளை வைத்­தி­ய­சா­லையில் மேற்கொள்­ள­ப்பட்ட மரண விசா­ரணை அறிக்­கையின் மூலம் மாணவியின் மூளைக்கு இரத்தம் செல்லும் நரம்பு ஒன்று வீங்கி வெடித்­ததால் இந்த மரணம் நிகழ்ந்­துள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. இந்த மாணவி இம்­முறை நடை­பெறவுள்ள கல்வி பொதுதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்­பி­டத்­தக்­க­து.

No comments:

Post a Comment