கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டபாகே உடகம மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயின்ற மதுபாசினி புத்திக லியனகே என்ற 16 வயது மாணவி பாடசாலையில் சங்கீத அறையில் பயிற்சி பெற்று விட்டு நடன அறைக்கு சென்ற வேளையில் மயங்கியுள்ளார்.
பின்னர் உடனடியாக ஆசிரியர்களினால் இவர் உடகம கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடையிலேயே மரணித்துள்ளார்.
இந்த மாணவி மில்லகாமுல்லை தெனியகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள அதேவேளை, இவர் குடும்பத்தின் மூத்தப் பிள்ளையாவார்.
இந்த மரணம் தொடர்பில் கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணை அறிக்கையின் மூலம் மாணவியின் மூளைக்கு இரத்தம் செல்லும் நரம்பு ஒன்று வீங்கி வெடித்ததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது. இந்த மாணவி இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment