உரத்தை நிர்ணய விலையில் வழங்க விவசாய திணைக்களம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 29, 2021

உரத்தை நிர்ணய விலையில் வழங்க விவசாய திணைக்களம் நடவடிக்கை

மரக்கறி செய்கையாளர்களுக்கு தேவையான உரத்தை தனியார் பிரிவினரிடமிருந்து கொள்வனவு செய்து, நிர்ணய விலையில் வழங்குவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உரத்தை, தேசிய உரச் செயலகத்தினூடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவை ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எல். அபேரத்ன குறிப்பிட்டார்.

அதற்கமைய பதுளை, நுவரெலியா மாவட்ட மரக்கறி செய்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள உரத் தட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உரத் தட்டுப்பாட்டினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மலையக பகுதிகளிலுள்ள விவசாயிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment