யாழில் 95 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது - வேன் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

யாழில் 95 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது - வேன் கைப்பற்றல்

பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருளை வேன் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை சுப்பர்மடம் சுடலைக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை இன்று (04) அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுடலைக்கு முன்பாக குறித்த கஞ்சா தொகையை வேன் ஒன்றில் ஏற்ற முற்பட்ட போது, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர். மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

45 பொதிகளில் 95 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஒன்றும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment