தமிழக சட்டசபை தேர்தல் - 75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மின்னணு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

தமிழக சட்டசபை தேர்தல் - 75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மின்னணு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

தமிழக சட்டசபை தேர்தல் நேற்றுமுன்தினம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவாகும்.

வழக்கமாக தேர்தல்களில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். ஆனால் இந்தமுறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அந்த பணி முடிந்ததும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 75 மையங்களில் அடுத்த (மே) மாதம் 2-ந்தேதி எண்ணப்படுகிறது. இன்றிலிருந்து 24 நாட்கள் வரை வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஓட்டு எண்ணும் மையங்களின் நுழைவு வாயில்களில் மூன்றாவது வளையமாக தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்கு அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 

துணைநிலை இராணுவம், சிறப்பு பொலிஸ்படை, உள்ளூர் பொலிசார் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

75 வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தினமும் கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறைகளில் இருந்து 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை அதிகாரிகள் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகில் பொலிசாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் யாரும் நெருங்காதபடி பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகே அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். 

ஓட்டு எண்ணிக்கையின் போதும் இதுபோன்று கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக 3 அல்லது 4 இடங்களில் தனித்தனியாக ஓட்டுக்களை எண்ணவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கையின்போது முகவர்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரையில் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகளில் 14 மேஜைகள் எப்போதும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது கூடுதலாக 2 மேஜைகளை அமைத்து 16 மேஜைகளுடன் ஓட்டு எண்ணும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment