'சர்வதேச சமூகத்திற்கு மிகத் தெளிவாகக் கேட்ட விடயம் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரம் கேட்கவில்லை' : முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

'சர்வதேச சமூகத்திற்கு மிகத் தெளிவாகக் கேட்ட விடயம் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரம் கேட்கவில்லை' : முஜிபுர் ரஹ்மான்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திற்கு மிகத் தெளிவாகக் கேட்டிருக்கிறது. எனினும் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரமே அது கேட்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார்.

அது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளடங்கலாக சர்வதேசத்திலுள்ள பலருக்கும் மிகத் தெளிவாகக் கேட்டிருக்கிறது. எனினும் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கும் பின்னால் இருந்தவர்களுக்குமே அது கேட்கவில்லை. இது மிகவும் வேடிக்கையான விடயமாகும்.

அதுமாத்திரமன்றி பிரதமர் பாராளுமன்றத்திலேயே மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். வாகனத்தில் செல்லும்போது ஊடகங்களுக்குக் கூறவில்லை. எனவே பொறுப்பு வாய்ந்த இடத்தில் பொறுப்புடன் வெளியிடப்பட்ட கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment