(செ.தேன்மொழி)
வத்தளை - கெரவலப்பிட்டிய பசளை தயாரிக்கும் நிலையத்தில் கழிவுப் பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் பகுதியில் சற்றுமுன்னர் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.
எனினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டிய பகுதியிலேயே இவ்வாறு திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவித்துள்ள வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment