எஸ்.எம்.எம்.முர்ஷித்
இன்று (17.02.2021) புதன்கிழமை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட இணைத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுனுக்கு கொவிட்19 தடுப்பூசியானது ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசியானது ஏற்றப்பட்டது.
இலங்கையில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையில் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இந்த தடுப்பு மருந்து ஏற்றிக் கொண்டேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment