மேல் மாகாணத்திலிருந்து நாளை 28ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாகனங்கள் மூலம் வெளிச் செல்லும் அனைவரும் ரெபிட் அன்ரிஜென் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 11 இடங்களில் மேற்படி பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை (28) விடுமுறை தினம் என்பதோடு, அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையுடன் இணைந்தவாறு சனி, ஞாயிறு தினத்துடன் நீண்ட விடுமுறை காரணமாக பெருமளவிலானோர் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு காணப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment