நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இணக்க சபைகளின் செயற்பாடுகளை இன்று 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சூழ்நிலை காரணமாக இணக்க சபைகளின் செயற்பாடுகளில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல் மற்றும் அதற்கான விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இடை நிறுத்தி வைக்கப்பட்டன.
அதற்கிணங்க சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உள்ளடக்கப்படாத பிரதேசங்களில் இணக்க சபை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
அதற்கிணங்க சுகாதார வழிமுறைகளை பின்பற்றி முறைப்பாடுகளை வழங்குவதற்கும் அதனை விசாரணை செய்வதற்கும் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பில் இணக்க சபை உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள இணக்க சபை உறுப்பினர்களுக்கு அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி உள்ளதாகவும் இணக்க சபை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment