பண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

பண்டிகைக் காலத்தில் பெரும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தடை

பண்டிகைக் காலங்களில் அதிக மக்கள் கூட்டத்தைக் கவரும் வகையிலான விருந்துபசாரங்கள் நத்தார், புதுவருட கொண்டாட்டங்களின் போது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை நிலைநிறுத்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொண்டாட்டங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பண்டிகைக் காலத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment