வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உழவர் சந்தையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : சிவாஜிலிங்கம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உழவர் சந்தையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உழவர் சந்தையை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்திற்கு பின்னர் எங்களுடைய மக்கள் பல்வேறு வகையிலும் கஷ்டப்பட்ட வண்ணம் இருக்கின்றார்கள். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

அதைவிட இன்னுமொரு கேள்வியினையும் கேட்க விரும்புகின்றோம். அதாவது தம்புள்ளையில் இருந்து வரும் மரக்கறிகளுக்கு பத்து வீத கழிவு இல்லை. தம்புள்ளையில் இருந்து வந்தால் ஒரு நீதியும் எங்களுடைய விவசாயிகளுக்கு பத்து வீத கழிவு என்றால் இது மிகவும் கொடுமையான ஒரு நடைமுறை. இந்த நடவடிக்கையிலிருந்து விலக்களிப்பதற்கு ஏற்கனவே பல உள்ளூராட்சி மன்றங்களில் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது அமுல்ப்படுத்தப்படுவதில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே இந்த நடைமுறையை உடனடியாக அமுல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் மக்கள் மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான போராட்டங்களுக்கு எங்களை தலைமை தாங்கும் நிலைக்கு தள்ளாதீர்கள் என்றார்.

No comments:

Post a Comment