கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள ஏனைய விமான நிலயைங்களினூடாக வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேர காலப் பகுதிக்குள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவானது நாளை (18) பிற்பகல் 6 மணி முதல் அமுலாகும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment