உடுதும்பறை, நிசாருவ பிரதேசத்தில் 5,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் உடுதும்பற பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, போலி நாணயத்தாள்களுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இச்சந்தேகநபரிடமிருந்து 8 கையடக்கத் தொலைபேசிகள், 2 பென் ட்ரைவ்கள், ஒரு இறுவெட்டு, ஒரு கணனி வன்தட்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உடுதும்பறை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இச்சந்தேகநபர் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment