வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 339 பேர் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானத்தில், அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன நகரிலிருந்து 287 பேர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து 47 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அத்தோடு இந்தியாவின் மும்பாய் நகரிலிருந்து 5 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment