ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது - சி.வி. விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 8, 2020

ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது - சி.வி. விக்னேஸ்வரன்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ...
ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நடைபெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். 

ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமாகவும், அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும், செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆகவே அரசியல் ரீதியான தந்துரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்காக நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும்.

ஏதோ ஒரு அரசியல் ரீதியான தந்துரோபாயமாக நாங்கள் எல்லோரும் சேர வேண்டும், நாங்கள் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை. இதுவரை காலமும் எங்களுடைய கொள்கை ரீதியான விடயங்களை புறகணித்து, அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர்கள்தான் சுமந்திரன் போன்றவர்கள்.

அவர்கள் திடீரென மாறுவார்கள் என்று எங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் எங்ளிடையே கொள்கை ரீதியான ஒன்றுமை அவசியம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment