மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொடை வீதியில், கொழும்பு -09 பிரதேசத்தில் சுங்கவரி செலுத்தப்படாத வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினரின் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சுங்கவரி செலுத்தப்படாது இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுச் சிகரெட்டுகள் 17,000 மற்றும் முச்சக்கர வண்டியுடன் இச்சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்கள் இருவரும் மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். முச்சக்கர வண்டியில் குறித்த சிகரெட்டுகள் கொண்டு செல்ல தயாராகவிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 33, 34 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேகநபர்களை இன்று (30) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment