ஏ.எச்.ஏ. ஹூஸைன்
கட்டிட நிர்மாணங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மண், மணல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப் புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் இப்பரிசோதனையூடாக விவசாய மண்ணின் தரத்தினை பரிசோதனை செய்து அந்நிலத்துக்குப் பொருத்தமாக பயிர் வகையினை செய்கை செய்வதற்குமான ஆலோசனை வழிகாட்டல்களும் இதனூடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் பிரதேச விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில் மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக இவ்வாய்வுகூடம் மட்டக்களப்பில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment