கொரோனா பரவலை தடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் தலைவர்களுடனும் இடம்பெற வேண்டிய ஆரோக்கியமான உரையாடல்கள் போதுமானதாக இல்லை என, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மற்றும் முன்னின்று செயற்படும் ஊழியர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கொரோணாவுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் மற்றும் முன்னணி ஊழியர்களின் நம்பிக்கையை அரசாங்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். வைரஸ் ஆபத்து அதிகரிப்பதால், அனைத்து பங்குதாரர்களுடனும் தலைவர்களுடனும் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அது போதுமானதாக நிகழ்வதை நான் காணவில்லை.
See Karu Jayasuriya's other Tweets
No comments:
Post a Comment