இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்தது - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 92 இலிருந்து 95 ஆக உயர்ந்துள்ளது.

227 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் (23) 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

23.03.2020 (10 பேர்)
88 - 97

22.03.2020 (09 பேர்)
79 - 87

No comments:

Post a Comment