அமெரிக்காவில், காசா போரைக் கண்டித்து, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசிய மாணவியொருவருக்கு, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அந்நாட்டு அரசு தடை விதித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மேகா வெமுரி என்ற மாணவி பட்டமளிப்புக்கு முந்தைய நிகழ்வில் உரையாற்றியபோது, காசாவில் நடத்தப்பட்டுவரும் போரை குறிப்பிட்டுப் பேசி, அதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, அந்த மாணவி மீது, பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, மே மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.
மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், மேகா தனது பட்டத்தைப் பெறுவார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மேகா, ‘இனப் படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனினும், எம்ஐடி அதிகாரிகள் உரிய நடைமுறை இல்லாமல் என்னைத் தண்டிக்க முயன்றதால் பெருமளவில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உரையாற்றியதால் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு விதியும் மீறப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
(த இந்து)
No comments:
Post a Comment