தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று (11) காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளது.
வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் கரையோர வாழ் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கடும் மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருகிறது.
காசல்ரீ, மவுசாக்கலை நீர்த் தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment