மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து : 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 17, 2025

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து : 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிப்பு

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 08 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 08 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 7 பேரும், பெண்கள் 05 பேரும், சிறுவர்கள் 5 பேரும் அடங்குகின்றனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனையடுத்து மஸ்கெலியா பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும், 08 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 08 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 08 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் நூலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கிராம சேவகர் ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார், அட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment