உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய (04) நாடாளுன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு, எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதற்கான ஆதாரங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய குழுக்களை தொடர்புபடுத்தி தர முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்போது, அவர் தொடர்ந்தும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது.
பிள்ளையான் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கு அப்பால் நீங்கள் யாரை கைது செய்ய வேண்டும் என நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. இது பொலிஸாரிற்குரிய விடயம்.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பல தகவல்கள் எங்களிடம் உள்ளன. இது தொடர்பாக நான் பாதுகாப்பு செயலாளரிடம் இது குறித்து தெரிவித்துள்ளேன். பாதுகாப்பு அமைச்சரும் இங்கிருக்கின்றார்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள். நாங்கள் திரிபோலி பட்டாலியன் குறித்து பல விடயங்களை நாடாளுமன்றத்தில் விவாதித்துள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் சாட்சியமளிக்கக்கூடிய குழுக்களை தொடர்புபடுத்தி தர முடியும்" என்றார்.
No comments:
Post a Comment