புகையிரத ஆசன முன்பதிவுக்கு அடையாள அட்டை, கடவுச்சீட்டு அவசியம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2024

புகையிரத ஆசன முன்பதிவுக்கு அடையாள அட்டை, கடவுச்சீட்டு அவசியம்

முன்பதிவு செய்யப்பட்ட புகையிரத ஆசனங்களுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தை மீளப் பெறுவது தொடர்பில் புகையிரத திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும்போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், புகையிரத நிலையத்திற்குள் பிரவேசிக்கும்போது மற்றும் பயணச்சீட்டைச் சரிபார்க்கும்போது பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை சரிபார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்ககைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்படும் ஆசனங்களின் பயணச்சீட்டுக்கான பணத்தை மீளப் பெற விண்ணப்பிக்கும்போது, உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் பிரதியை புகையிரத நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment