'வெள்ளை வேன்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான முறையில் செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) விடுவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டார்.
சர்ச்சைக்குரிய “வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை” தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நடத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment