முடங்கியது முல்லைத்தீவு - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு - News View

About Us

About Us

Breaking

Monday, February 25, 2019

முடங்கியது முல்லைத்தீவு - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (25) முன்னெடுக்கப்படும் கவனவீர்ப்பு போராட்டத்துக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி போன்ற நகர்ப் பகுதிகள் எங்கும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளதோடு தனியார் மற்றும் அரச பேரூந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை. 

அதேவேளை, பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைகளும் இயங்கவில்லை. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டமே வெறிச்சோடி காணப்படுவதோடு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ள கிளிநொச்சி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment