போதைப் பொருள் பாவனை தொடர்பான விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 25, 2019

போதைப் பொருள் பாவனை தொடர்பான விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர்களும் உறுப்பினர்களும் கொக்கேய்ன் போதைப் பொருள் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட அறிக்கை தொடர்பான விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்படும். 

அதனையடுத்து இது சி.ஐ.டிக்கும் சபை முதல்வர் மற்றும் அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடமும் கையளிக்கப்படும். 

தான் 30 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருவதாகவும் அத்தனை காலமும் பாராளுமன்ற செயற்பாடுகளை கண்காணித்தும் அறிந்தும் வந்த தனக்கு, சக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் நன்கு தெரிந்துள்ள நிலையில் தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் போதைவஸ்து பாவனையில் ஈடுபடவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும் என்று அமைச்சர் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment