மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிநெறி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிநெறி

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள கிராம சேவையாளர்களுக்கான 10 நாள் பயிற்சிநெறி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்று ஆரம்பமானது.

வளவாளராக ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஜே.பத்திநாதன் பயிற்சிகளை வழங்கினார்.

குறித்த 10 நாள் பயிற்சிநெறியில், தாபனக்கோவை, அலுவலக நடைமுறைகள், கோவைகள், மாவட்டம் சம்பந்தமான விடயங்கள், பிரதேசம் மற்றும் கிராமங்கள் சார் விடயங்கள் என பல்வேறு விடயப்பரப்புகளின் கீழ் கற்பித்தல்கள் நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய கிராம உத்தியோகத்தர்களாக 76 பேர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தயாபரன், மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் எம்.கோமளேஸ்வரன், உப தலைவர் ரி.லிங்கேஸ்வரன், செயலாளர் எஸ்.ஜீவிதன், உப செயலாளரும் அகில இலங்கை உறுப்பினருமான எம்.ஐ.ஏ.சுபைர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment