ஓய்வு பெற்ற ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒத்துழைப்பு : தேவையேட்படின் இலவச சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவேன் - எதிர்க்கட்சித் தலைவர் உறுதி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 8, 2025

ஓய்வு பெற்ற ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒத்துழைப்பு : தேவையேட்படின் இலவச சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவேன் - எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

(எம்.மனோசித்ரா)

ஓய்வு பெற்ற ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகபட்ச ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படும். இந்த பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் எடுக்க முடியுமான உட்சபட்ச நடவடிக்கைகளை எடுத்து, நீதி நிலைநாட்டப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பினரால் வெள்ளிக்கிழமை பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

பி.சி. பெரேரா சம்பள ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்காமையால் சுமார் 85,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு 40,000 ரூபா ஓய்வூதியம் பெறும்வேளை மற்றும் சிலர் சுமார் 120,000 ரூபா ஓய்வூதியம் பெறுகின்றனர்.

இந்த பாரதூரமான அநீதிக்கு எதிராக தானும் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் எடுக்க முடியுமான உட்சபட்ச நடவடிக்கைகளை எடுத்து, நீதியை நிலைநாட்டுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் தலைமை தாங்குவோம். இது தொடர்பான முன்மொழிவுகளை இந்த இம்முறை வரவு செலவுத் திட்ட விவாதத்திலும், குழுநிலை விவாதத்தின்போதும் முன்வைப்பேன். தேவையேட்படின் இலவச சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment