போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி - எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 16, 2025

போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி - எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்

உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா - உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக நீடித்து வரு​கிறது. 

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி​யில் பதவி​யேற்ற டொனால்ட் ட்ரம்ப் இரு நாடு​கள் இடையே போரை நிறுத்த சமரச முயற்​சிகளை தொடங்​கி​னார். எனினும் அவரது முயற்சி வெற்றி பெற​வில்​லை.

இந்​நிலை​யில் ட்ரம்ப் வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது, ”அடுத்த 50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும். 

புதின் மீது நான் மிக​வும் அதிருப்​தி​யில் இருக்​கிறேன். தான் சொல்​லும் விஷ​யங்​களை செய்​யக்​கூடிய நபராக அவரை நான் நினைக்​க​வில்​லை. அவர் மிக​வும் அழகாக பேசு​வார். ஆனால் இரவில் மக்​கள் மீது குண்​டு​களை வீசு​வார். 

ரஷ்​யா​வுக்கு எதி​ரான போரில் உக்​ரைனை ஆதரிக்​கும் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா பேட்​ரி​யாட் ஏவு​கணை அமைப்​பு​கள் மற்​றும் பேட்​டரி​களை அனுப்​பும்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment