இலங்கையில் திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க உலக உணவுத் திட்டம் நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 11, 2022

இலங்கையில் திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க உலக உணவுத் திட்டம் நிதியுதவி

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த திரிபோஷா உற்பத்தி மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத்திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக உணவு திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்ததாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் திரிபோஷா உற்பத்தி மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் திரிபோஷ உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக உலக உணவு திட்டத்தின் நிதி உதவியுடன் திரிபோஷ உற்பத்தியை நாட்டில் மீள் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment