கொரியாவிலிருந்து வந்தவருக்கு மதுபானத்தை கொடுத்து நகைகளை திருடிச் சென்ற பெண் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 11, 2022

கொரியாவிலிருந்து வந்தவருக்கு மதுபானத்தை கொடுத்து நகைகளை திருடிச் சென்ற பெண்

(எம்.வை.எம்.சியாம்)

ஒருவருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளதுடன் குறித்த பெண் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பெண் நேற்று திஸ்ஸமஹாராமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முகநூல் ஊடாக நட்பாக பழகிய நபர் ஒருவருடன் வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து 15 பவுண் நிறையுடைய 27,50,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

குறித்த பெண் அந்நபர் கொண்டு வந்த காரையும் எடுத்துச் சென்றுள்ளதுடன் அதை திஸ்ஸவாவிக்கு அருகில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது 40 வயதான ஏமாற்றப்பட்ட குறித்த நபர் கொரியாவில் பணிபுரிந்து விட்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment