எம்.ஜி.ஆரின் நினைவு தினம் கொழும்பு நகர மண்டபத்தில் அனுஷ்டிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 26, 2021

எம்.ஜி.ஆரின் நினைவு தினம் கொழும்பு நகர மண்டபத்தில் அனுஷ்டிப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமசந்திரனின் (MGR) 34ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26) இலங்கை தலைநகர் கொழும்பு நகர மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை MGR மன்றத் தலைவர் இத்ரீஸ் மற்றும் அகில இங்கை மக்கள் திலகம் சமூக சேவை மன்றத் தலைவர் கலை சிறீ பாலண் ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோசப் பெர்னாந்தோ தலைமை தாங்கியதோடு

விஷேட அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரண், இலங்கை அதிமுக செயலாளர் இம்ரான் நெய்னார், தினகரன் ஆசிரியர் கே.ஈஸ்வரலிங்கம், ஸ்டார் டி.வி. அறிவிப்பளர் தயாரிப்பாளர் உவைஸ் ஷெரீப், பிரபல பாடகர் அக்ஸரா இசைக்குழு தலைவர் கவிகமல்

ஆகியோரோடு சிறப்பதிதிகளாக கவிஞர் கலா விஷ்வநாதன், கிராமிய கலை ஒன்றிய தலைவர் விஜயராஜ் கணேஷன், திரு. முஷம்மில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இந்நிகழ்வில் இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத் தலைவர் இம்ரான் நெய்னார் மற்றும் பிரமுகர்கள் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இக்கூட்டத்ததில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment