இறுக்கமான சுகாதார வழிகாட்டலுடன், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான இரசிகர்களுக்கு எதிர்வரும் LPL 2021 கிரிக்கெட் தொடரை பார்வையிட, சுகாதார அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்விற்றரின் பதிவிட்டுள்ள அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கிரிக்கெட் தொடருக்கும் பொருந்துமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகயத்தினால் குறிப்பிடப்படும் வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றி போட்டிகளை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment