உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாதாரண மக்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு முன்னின்று உழைப்பதன் மூலமே அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை வெற்றி கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய பிரதேச உறுப்பினர் சத்தியப்பிரமாண நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே இக்கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளர்.
கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த ஒரு ஆசன அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் அப்பதவியை தாமாகவே முன்வந்து இராஜினாமாச் செய்தமையினைத் தொடர்ந்து அப்பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட பட்டியல் வேட்பாளர் எம்.ரீ.எம். பைறூஸ் என்பவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமித்துள்ளார்.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி கடந்த ஜூலை மாதம் 30ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினர் எம்.ரீ.எம். பைறூஸின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (06) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர், பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன் போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Thehotlinelk
No comments:
Post a Comment