உயர் கல்வி மற்றும் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முற்பதிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இன்று (02) முதல் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியுமென கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள pre-departure-vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவைத் தொடர்ந்து இரு நாட்களில் உரிய தொலைபேசி இலக்கத்திற்கு SMS மூலம் உரிய திகதி மற்றும் இடம் தொடர்பான விடயங்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment