வீதி விபத்து தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை நடிகையுமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உபேக்ஷா கண்டியிலிருந்து குருணாகல நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அவர் பயணித்த வாகனம் கட்டுகஸ்தோட்டை, நுகவெல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய இளைஞன் காயங்களுக்குள்ளாகி, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட உபேக்ஷாவை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment