தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடி பொருட்கள் சில யாழ்ப்பாணம் பொலிகண்டியில் இன்று (24) மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெடி பொருட்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment