காஸ்மீர் மக்களுக்கு நீதி கேட்டு கொழும்பில் போராட்டம் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, February 6, 2021

காஸ்மீர் மக்களுக்கு நீதி கேட்டு கொழும்பில் போராட்டம் !

நூருல் ஹுதா உமர்

காஸ்மீரில் வாழும் மக்களுக்கும் உணர்வுகளும் உரிமைகளும் இருக்கிறது. அவர்களின் உடலில் ஓடும் இரத்தமும் சிவப்பே. அங்கு துயரில் வாழும் மக்களுக்கு சர்வதேச அமைப்புக்கள் தலையிட்டு நீதி பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான காரியாலய முன்றலில் பிரபல சமூக செயற்பாட்டாளரும் காஸ்மிருக்கான குரல்கள் அமைப்பின் தலைவருமான மிப்ளால் மௌலவியின் தலைமையில் அடையாளப் போராட்டமும் மகஜர் கையளிப்பும் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.

சுலோகங்களையும், இலங்கை தேசிய கொடியையும் ஏந்தி சமூக இடைவெளிகளை பேணி நடைபெற்ற இந்த அடையாளப் போராட்டத்தின் பின்னர் ஐ.நா காரியாலய அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திலும் இது தொடர்பிலான மகஜர் ஒன்று அன்றைய தினமே கையளிக்கப்பட்டது. 

இந்த அடையாளப் போராட்டத்தில் சமூக நல செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment