ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளை துணி கட்டி கல்முனையில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளை துணி கட்டி கல்முனையில் ஆர்ப்பாட்டம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வெள்ளை துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று கல்முனை பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் ரஸாக்கின் ஏற்பாட்டில், கல்முனை பிரதான வீதியில் கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டமானது பல்வேறு சுலோகங்களை தாங்கி மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் முடிவுறுத்தப்பட்டது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஏ.மனாப் உள்ளிட்ட அரசியல், சமூக, பொதுநல, செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன. இனவாத தீ இன்றோடு அணையட்டும், விஞ்ஞானம் புதைப்பு இனவாதம் எரிப்பு, அரசே 20 நாள் குழந்தை எரிப்பில் இருந்து உன் அழிவு ஆரம்பம், WHOஇன் வழிகாட்டலை பின்பற்று, உலகமே புதைக்கிறது நாம் மட்டும் எரிக்க வேண்டுமா? அரசே உனது கொடூர செயலை நிறுத்து போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment