யாழ் மாவட்டத்தில் முன்னோடியாக திகழ்ந்த ஆவரங்கால் சமுர்த்தி வங்கி உத்தியோகபூர்வமாக கணனி மயப்படுத்திப்பட்டு பாவனையாளர் மயப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வினை செயற்பாட்டு ரீதியாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களால் (24) ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், சமுர்த்தி வங்கிகளின் யாழ் மாவட்ட பணிப்பாளர், வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அங்கஜன் இராமநாதன் சமுர்த்தி வங்கியின் பிரதம பணிப்பாளருடன் நிகழ்வின்போது நிகழ் நிலையில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment