மீண்டும் திறக்கப்பட்டது கோட்டை பொலிஸ் நிலையம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

மீண்டும் திறக்கப்பட்டது கோட்டை பொலிஸ் நிலையம்!

கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளராக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தொற்ற நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இன்று 21 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளராக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் ஏனை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர் அத்தோடு, பொலிஸ் நிலையம் தற்காலிகமாக நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர், ஏனை பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸ் அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் சேவைகளைப் பெற முடியும் என்றும் அஜித் ரோ ஹானா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment