தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5,236 முறைப்பாடுகள் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5,236 முறைப்பாடுகள்

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5,236 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 1,011 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 4,225 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் 25ஆம் திகதி மாலை 4.00 மணி முதல், நேற்று (26) மாலை 4.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் 163 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 18 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 145 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment