தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியது அம்பலம் - கருணா அம்மான் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியது அம்பலம் - கருணா அம்மான்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2 கோடி இலஞ்சம் வாங்கியது அம்பலம்
பாறுக் ஷிஹான்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளதென விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர் மகா சபை சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள தலைமை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை வரவேற்று வீரமுனைப் பகுதயில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் நேற்றிரவு கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு சுகபோகங்களை அனுபவித்தனர். இந்த கூட்டமைப்பினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை அதே அரசாங்கத்திற்கெதிராக கொண்டு வரப்பட்ட போது ரூபா 2 கோடி பணத்தை இலஞ்சமாக வாங்கியுள்ளனர். இந்த விடயத்தை அந்நேரம் அம்பலத்திற்கு கொண்டு வந்தவர் சிவசக்தி ஆனந்தன் என்பவராவார்.

சிவசக்தி ஆனந்தன் நேர்மையானவன். இந்த 2 கோடி பணத்தினை கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களும் பெற்றுக்கொண்டிருந்தனர். இவ்வாறானவர்களின் போக்கினால் தான் அதாவுல்லாஹ், ஹரீஸ் போன்றவர்கள் தமிழ் மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருகின்றனர் எனக்குற்றஞ்சாட்டினார்.

No comments:

Post a Comment