திருகோணமலை காவல்துறையினரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற ஒரு மீனவரை கரைக்கு அழைத்து வர கடற்படை இன்று (2020 மார்ச் 29) நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு நபர் திருகோணமலை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற பின் ரகசியமாக மீண்டும் கரைக்குத் திரும்ப முயன்கிறார் என்று திருகோணமலை காவல்துறையினரால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான நபர் சென்ற படகை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பின் குறித்த நபர் பயணித்த படகு உட்பட மேலும் இரண்டு படகுகளை சந்தேகத்தின் பேரில் கடற்படை கைது செய்துள்ளதுடன் படகுகளில் பயணித்த 10 நபர்களையும் கண்டுபிடித்து திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்தது.
எனவே, இந்த 03 படகுகளையும் கடற்படை இன்று (29) அதிகாலை கரைக்கு கொண்டு வந்தது.
பின்னர், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் படி கடற்படை மருத்துவர்கள், இந்த நபர்களுக்கு ஆரம்ப நோய் அறிகுறிகள் உள்ளதா என்று சோதித்தனர்.
அவர்களின் படகுகள் கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவால் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.
கடற்படையால் கொண்டுவந்த அனைவருமே தனிமைப்படுத்தலுக்காக சாம்பூர் கடல்படை முகாமில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
No comments:
Post a Comment