2004 ஆம் ஆண்டில் பிரிட்டன், பர்மிங்காம் குடியிருப்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக அமெரிக்காவின் அலபமாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வீச ஊசி ஏற்ப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
43 வயதுடைய நதானியேல் வூட்ஸ் என்ற நபருக்கே இவ்வாறு மரண தண்டனையானது வியாழக்கிழமை இரவு 9:01 மணிக்கு நிறைவேற்றப்பட்டுள்ளதாக அலபமாவில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு சம்பந்தமாக வூட்ஸ் மற்றும் அவரது நண்பர் கெர்ரி ஸ்பென்சர் ஆகியோர் 2004 ஆம் ஆண்டு பர்மிங்காம் காவல்துறை அதிகாரிகளான கார்லோஸ் ஓவன், ஹார்லி சிஷோல்ம் மற்றும் சார்லஸ் பென்னட் ஆகியோரின் கொலைகளுக்கு காரணமாக அமைந்ததுடன் தண்டனை பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment