மக்கள் ஆணையின் பிரகாரமே ஐ.நா.வின் தீர்மானங்களிலிருந்து விலக தீர்மானித்தோம் - அமைச்சர் மஹிந்த சமரசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

மக்கள் ஆணையின் பிரகாரமே ஐ.நா.வின் தீர்மானங்களிலிருந்து விலக தீர்மானித்தோம் - அமைச்சர் மஹிந்த சமரசிங்க

(ஆர்.விதுஷா) 

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த ஆணையின் பிரகாரமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளிலிருந்தும் விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னைய அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. 

மாறாக ஜனாதபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றது. அதற்கு அமையவே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment