குடிவரவு குடியகல்வு திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு கிடைக்காவிடின் நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட தமது உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் அனைத்து இடங்களிலும் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக குடிவரவு குடியகல்வு ஊழியர் சங்கத் தலைவர் கெ.ஏ.ஏ.எஸ் கனுகல தெரிவித்தார்.
தமது திணைக்களத்தில் இடம்பெற்று வரும் பாரிய பிரச்சினைகள் மற்றும் அநீதிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிய தந்தபோதும் இதுவரை அவர்கள் அவ்விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென்றும் அவர் கூறினார்.
இதே காரணத்துக்காக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் 2018ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்தப்பட்டது. பணிகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்தார்.
பிரதமர் இதற்கென தனியான குழுவொன்றை நியமித்தபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இதுவரை எவ்வித முன்னேற்றகரமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.
ஜனாதிபதியினால் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட ரனுக்கே விசேட ஆணைக்குழுவுக்கு இவ்விடயம் தொடர்பில் எழுத்துமூலம் சமர்பிக்கப்பட்டபோதும் அந்த ஆணைக்குழு முன்வைத்துள்ள சிபாரிசுகளில் எந்தவொரு இடத்திலும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் பற்றிய தரவுகள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
No comments:
Post a Comment