ஆளுநரின் அதிரடி நடவடிக்கை யாழ். மாநகர உணவகங்களில் திடீர் சோதனை : 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 6, 2019

ஆளுநரின் அதிரடி நடவடிக்கை யாழ். மாநகர உணவகங்களில் திடீர் சோதனை : 76 உணவகங்களில் சுகாதாரச் சீர்கேடு

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ். மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.

உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.

மேலும், சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட உணவகங்களுக்கு மிக தகுதி வாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டதுடன் தவறும் பட்சத்தில் குறித்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஆளுநரின் 21 தனிப்பட்ட செயலணி உறுப்பினர்கள் ஒவ்வொரு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டதுடன் எட்டு பிரிவாக 51 பொதுச்சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கை குறிப்பாக நல்லூர் மகோற்சவ திருவிழாவினை முன்னிட்டு மக்களின் நலன்கருதி சுத்தமான உணவுகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஆளுநரினால் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment