தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களின் கட்டணம் இன்று 01ஆம் திகதி முதல் 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, தெற்கு அதிவேக வீதியின் மாக்கும்புர – காலிக்கான பஸ் கட்டணமாக 420 ரூபாவாகவும் மாக்கும்புர – மாத்தறைக்கான பஸ் கட்டணமாக 530 ரூபாவாகவும் அறவிடப்படவுள்ளது.
இதேவேளை, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து இன்று பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பண்டிகைக் காலத்தில் எதுவித தடையுமின்றி அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை இயக்கச் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்.
ஒவ்வொரு 30 கிலோ மீற்றர் தூரத்திற்கும் ஒரு வெளிச்செல்லும் நுழைவாயில் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிகவேக நெடுஞ்சாலைப் பாதகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று ஓப்பநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment